districts

சிறையிலிருந்து ஜாமீனில் வந்தவர் தற்கொலை

கும்மிடிப்பூண்டி, ஜூலை 29-

     சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 19). இவர் மீது சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ள நிலையில் அண்மையில் இவர் ஜாமீனில் வெளியே வந்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்த அவர் அவர்கள் வீட்டில் இல்லாதபோது தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்டார்.