சென்னை,மே 28
ஜப்பானில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒசாகா நகரில் இருந்து டோக்கியோ நகருக்கு செல்ல புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
இதற்காக ரயில் நிலையம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்குள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா வுடன் புல்லட் ரயிலில் பயணம் செய்து டோக்கியோ சென்றடைந்தார். தனது புல்லட் ரயில் பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை 2½ மணி நேரத்திற்குள் அடைந்து விடுவோம். உரு வமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும், தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணை யான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர் களது பயணங்கள் எளிதாக வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.