districts

img

கன்னியம்மன் பேட்டையில் பரவிய ஆயில்: பயிர்கள் நாசம்

சென்னை, டிச. 11- சென்னை மாநகராட்சிக் குட்பட்ட மண்டலம் 2க்குட்பட்ட 16ஆவது வார்டு கன்னியம்மன் பேட்டை யில் தனியாருக்கு சொந்த மான குடோன் உள்ளது.  இங்கு ஆயில் உள்ளிட்ட  பொருட்களை இறக்கி  வைத்து பிற மாநிலங்க ளுக்கு அனுப்பி வைக்கப்படு வதாகவும், வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப் படுவதாகவும் கூறப்படு கிறது. இந்நிலையில் மிக்ஜம் புயலையொட்டி பெய்த கனமழையில் அந்த குடோனில் இருந்து வெளி யேறிய ஆயில் மழை நீரில் கலந்து கன்னியம்மன் பேட்டை, காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 50 குடியிருப்புகளுக்கு குள்ளும், விளை நிலத்தில், வாழைத் தோப்புகளிலும் பரவி உள்ளது. அதேபோல் ஆண்டார் குப்பம் பகுதியில் விளைநிலங்களில் பரவியுள்ளது. இதனால் அந்த பகுதி  மக்கள் கடும் அவதிக்குள் ளாகியுள்ளனர். மேலும் அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், அதை சுத்தப்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறு கின்றனர். விளை நிலங்களில்  கழிவு ஆயில் கலந்ததால் பயிர்கள் சேதம் அடைந்துள் ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.  எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, படிந்துள்ள ஆயில் படிமங்களை அப்புறப் படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும், சேதமான பயிர் மற்றும் வாழை மரங்களை மதிப்பீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.