சென்னை, ஜன. 30 - அரசு, தனியார் கட்டி டங்களை இடிக்கும் முன்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்று மேயர் ஆர்.பிரியா கூறினார். பெருநகர சென்னை மாநகராட்சி மாதாந்திர கூட்டம் திங்களன்று (ஜன.30) ரிப்பன் மாளி கையில் மேயர் ஆர் பிரியா தலைமையில் நடை பெற்றது. நேரமில்லா நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 123வது வட்ட உறுப்பினர் எம்.சரஸ்வதி பேசியதாவது: நாகேஸ்வரராவ் பூங்கா அருகே உள்ள சமூக நலக்கூடத்தை புதுப் பிக்கும் பணி எப்போது தொடங்கும்? வெங்கட்ராமன் தெரு வில் உள்ள பொதுக்கழிப் பிடத்தை விரைந்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகேஸ்வ ரராவ் பூங்கா உடற்பயிற்சி கூடத்தில் பழுதடைந்துள்ள உபகரணங்களை முழுமை யாக சீரமைக்க வேண்டும். எல்டாம்ஸ் சாலையில் உள்ள மீன் சந்தை, அற நிலையத்துறைக்கு சொந்த மான இடத்தில் உள்ளது. இங்கு கழிவறை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கள் இல்லை. அறநிலையத் துறையில் பேசி, அந்த இடத்தில் அடிப்படை வசதி கள் செய்து கொடுக்க வேண்டும். பல்லக்கு மாநகர், கபாலி நகர், விசாலாட்சி தோட்டம் உள்ளிட்ட பகுதி களில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் சுமார் 2 ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடை பழுதடைந்துள்ளது. வாரியமும் நிதி ஒதுக்க மறுக்கிறது. மாநகராட்சியும் குழாய்களை சீரமைக்காமல் உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும். பள்ளி அருகே உள்ள கடைகளை அகற்றி மாற்று இடம் வழங்க வேண்டும். ஏரியா சபை குறித்த பெயர்ப்பட்டியல் கடந்த மாதமே 98வது வார்டு உறுப்பினர் கொடுத்துள்ளார். ஆனால், இரண்டு தினங்க ளுக்கு முன்பு, பெயர்ப் பட்டியலை மாற்றி தரும்படி கோரியுள்ளனர்.
இது முறையற்றது. இத்தகைய குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். 98வது வட்டத்தில் டெங்கு காய்ச்சலால் ஒருவர் உயி ரிழந்துள்ளார். மாநகரம் முழுவதும் கொசு தொல்லையை ஒழிக்க முழு முயற்சி எடுக்க வேண்டும். 41வது வட்டத்தில் தூய்மைப் பணியாளர்களை அதிகரிப்பதோடு, வார்டு உறுப்பினருக்கான அலு வலகம் கட்டித்தர வேண்டும். தூய்மை பணி கள் தனியாருக்கு கொடுக்கப் படுகிறது. இதற்கான ஒப்பந்த நகலை உறுப்பி னர்களுக்கு வழங்க வேண்டும். 4 வது வார்டு ஜோதி நகரில் இருந்து சடையங்குப்பம் செல்லும் சாலையில் 10 ஆண்டு களாக கட்டப்பட்டு வரு கிறது. மணலி செல்லும் பாதையில் 7 ஆண்டுகளாக மேம்பாலம் கட்டும் பணி முடியாமல் உள்ளதால், சுமார் 6 கி.மீ தூரம் மக்கள் சுற்றி செல்ல வேண்டி யுள்ளது. இந்த பாலப்பணி கள் எப்போது முடியும்? எர்ணீஸ்வரர் நகர் 4வது தெரு மழைநீர் கால்வாய் பணி குறித்து 3 மாதங்களுக்கு முன்பு மன்றக் கூட்டத்தில் கேட்ட போது, 2 நாளில் முடிக்கப் படும் என்று ஆணையர் கூறி னார். அந்த பணி எப்போது முடிக்கப்படும்? 15 ஆண்டுகளாக பராமரிக்கப் படாத மகாலஷ்மி நகர் பிர தான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். அண்ணாசாலையில் தனியார் கட்டிடத்தை இடிக்கும் முன்பாக பாது காப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை. இத னால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரி ழந்துள்ளார். கடமையை செய்யாத அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது? இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமூக நலக்கூடம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். உடற்பயிற்சி கூடம் முழுமையாக விரைந்து சீரமைக்கப்படும். மீன் சந்தை தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சருடன் விவாதிக்கப் படும். பள்ளிக்கு இடை யூறாக உள்ள கடைகள் மாற்றப்படும். ஏரியா சபைக்கு, மக்க ளோடு இணைந்து செயல்படுகிறவர்களை பரிந்துரைக்க வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கையை அதி கரிக்க நடவடிக்கை எடுக்கப் படும். அண்ணாசாலை விபத்து தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு, தனியார் கட்டிடங்கள் இடிக்கும் முன்பாக மாநக ராட்சி உதவி பொறி யாளர் உள்ளிட்ட அதிகாரி கள் ஆய்வு செய்வார் கள்”என்றார்.