வேலூர், ஜூன் 30-
சாதிச்சான்று வழங்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் மாவட்ட அமைப்பாளர் சி. எஸ்.மகாலிங்கம் தலை மையில் நடைபெற்றது.
வேலூர் சேண்பாக்கம், காட்பாடி பகுதிகளில் காட்டுநாயக்கன் பழங்குடி மாணவர்களுக்கு சாதிச் சான்று வழங்காமல் கால தாமதம் செய்து வரு வால், கல்லூரிகளில் சேர முடியாமல் பரிதவிக்கின்ற னர். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் விரைந்து செயல்பட்டு சாதிச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்னை அடுத்த குற வன் குடிசை கிராமத்தில் நான்கு தலைமுறைகளாக வசித்து வரும் 20க்கும் மேற்பட்ட மலைகுறவர் பழங்குடி குடும்பத்தின ருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். கேரள அரசு வழங்குவதைப் போன்று ரூ.10லட்சம் மதிப்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்.
காட்பாடி வட்டத்தில் உள்ள எம்ப்ளாளூர், செஞ்சி பாறையூர், ஒட்டனேரி பகுதி மக்களுக்கு 2006 வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வசிக்கும் வீடுகளுக்கும், அனுபவத்தில் உள்ள விவ சாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
அணைக்கட்டு மலைப் பகுதியில் பீஞ்சமந்தை, பலாம்பட்டு, குலையம் உள்ளிட்ட கிராம முறையான சாலைவசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
ஒன்றிய அரசு 1980 வனபாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதை கைவிட வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் அடிப்படை உரிமைகளும், அரசு சலுகைகள் பெறமுடி யாது. எனவே அச்சட் டத்தில் திருத்தம் செய்ய கூடாது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ். தயாநிதி துவக்கி வைத்தும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் நிறைவு செய்தும் பேசினர்.
மாநில துணைச் செய லாளர் ஆர்.மாரிமுத்து, விவ சாயிகள் மாவட்டத் தலை வர் ப.சக்திவேல் கோரிக்கை களை விளக்கி பேசினர். விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சாமிநாதன், விதொச மாவட்டச் செய லாளர் செ.ஏகலைவன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர்.