கள்ளக்குறிச்சி, அக்.1- செம்மணங்கூர் மற்றும் அரளி கிராம மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்தது. இதன் எதிரொலியாக உளுந்தூர் பேட்டை வருவாய் வட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் செம்மணங்கூர் ஆதிதிராவிட நல ஆரம்பப் பள்ளியில் குடிநீர் பிரச்சனை, ஆசிரியர்கள் பற்றாக் குறை போன்றவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் காலை 8 மணிக்கு தொடர்ந்து பேருந்தை இயக்கிட 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து கழக உளுந்தூர்பேட்டை கிளை மேலாளர் தெரிவித்தார். செம்மனங்கூர் கிராமத்தில்புல எண் 297/11.298/3,299/3,300 / 3ல் இ-பட்டா ஒரு மாதத்திற்குள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார் புதுத் தெருவில் மின்விளக்குகள், தார் சாலைஅமைத்து தரப்படும் எனவும் வருவாய் வட்டாட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு பி.சுப்பிரமணியன்,ஒன்றிய செயலாளர் டி.எஸ்.மோகன், ஒன்றிய செயலாளர் கிழக்கு ஜெ. ஜெயக்குமார், செம்மணங்கூர் கிளைச் செயலாளர் வி.பாஜி மற்றும் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.