districts

img

சாலை அமைக்க அதிகாரிகள் உறுதி: போராட்டம் ஒத்திவைப்பு

விழுப்புரம், டிச. 19- சாலை வசதி கேட்டு காணை வட்டார வளர்ச்சி அலு வலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது. அதி காரிகள் கோரிக்கையை நிறை வேற்றித் தருவதாக உறுதியளித்த தையடுத்து போராட்டம் தற்காலிக மாக ஒத்தி வைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி வட்டம், காணை ஊராட்சி ஒன்றியம் கருவாச்சி முதல் கடையம் வரை செல்லும் வயல்வெளி சாலையை நூற்றுக்கும் மேற்பட்ட விவ சாயிகள் நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றனர், விவ சாயிகள் கடந்த பல ஆண்டு களாக சொந்த செலவில் அந்த சாலையை சீரமைத்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அந்த சாலையை அதிகாரிகள் துணை யுடன் தனிநபர் ஒருவர் உழவு செய்துள்ளார். இதுகுறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையம், வருவாய்த்துறை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தனிநபரிடம் இருந்து சாலையை மீட்டு, சீரமைக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காணை வட்டார வளர்ச்சி அலு வலகத்தை திங்களன்று (டிச. 19) முற்றுகையிடப் போவ தாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே காணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன், எழிலரசன் ஆகியோர் தலைமையில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், தலைவர் ஆர்.தாண்டவராயன், பொருளாளர் பி.சிவராமன், வட்டச் செயலாளர் ஏ.நாகராஜன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கையை ஒரு மாத காலத்திற்குள் நிறை வேற்றித் தருவதாக எழுதிக் கொடுத்ததையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.