districts

img

ஏரியில் மண் கொள்ளைக்கு துணைபோகும் அதிகாரிகள்: சிபிஎம் புகார்

விழுப்புரம், ஜூன்.17- கண்டாச்சிபுரம் அருகே ஏரி மண் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராமமூர்த்தி தலைமையில் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்டி.முருகன், வட்டச் செயலாளர் எஸ்.கணபதி, ராமலிங்கம் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர். அப்போது கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே  காரணதாங்கல் ஏரியில் மண் கொள்ளைபோகிறது. இதற்கு துணைபோகும் வட்டாட்சியர், உதவி ஆய்வாளர் மீது ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கொள்ளைக்கு பயன்படுத்தும் எந்திரத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

;