districts

img

கிராம மக்கள் போராட்டம்: பட்டா வழங்க அதிகாரிகள் உறுதி

கள்ளக்குறிச்சி, டிச.21- ஒரத்தூர் மற்றும் கீரனூர் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பா.கில்ல னூர் பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வரும் தலித் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்,துவக்கப் பள்ளிக்கு சுற்றுச்சூழல் அமைக்கும் பணியை விரைவாக கட்டி முடிக்க வேண்டும். வடக்குத் தெருவில் கழிவுநீர் வாய்க்காலில் தண்ணீர் தேங்கி நிற்பதை வெளியேற்ற வேண்டும்.  டீ ஒரத்தூர் நத்தம் புறம்போக்கில் வீடு கட்டி இருக்கும் அனைவருக்கும் விரைவில் பட்டா வழங்க வேண்டும். பா.கீரனூர், டீ,ஒரத்தூர் ஊராட்சியில் தகுதியான குடும்பங்களை வறுமைக்கோடு பட்டியலில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டி. சிவகுமார், எஸ். மனோகர், டி. பரசுராமன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச்  செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பி னரும் ஒன்றிய கவுன்சிலருமான இ.அல மேலு,ஒன்றிய செயலாளர் டி. எஸ்.மோகன் மற்றும் பலர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். பின்னர், கோரிக்கை மனுக்களை திரு நாவலூர் துணை வட்டார வளர்ச்சி அலு வலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்தனர். மனுக்களை பெற்று கொண்ட அதிகாரிகள் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.