கிருஷ்ணகிரி, டிச.29 - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை வட்டத்தில் இருந்து பிரித்து தனி வட்டமாக அறிவிக்கப்பட்ட அஞ்செட்டி. இந்த வட்டத்திற்கு உட்பட்ட உரிகம் ஊராட்சி மன்றம். இங்குள்ள ஈரண்ணன் தொட்டி கிராமத்தில் 3 தலைமுறைகளை கடந்த 50 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பம் குருவிக்கூடு போன்று அமை த்திருக்கும் குடிசைகளில் வசித்து வருகி ன்றனர். சொந்த வீடு, நிலம்,குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா இல்லாததால் தாத்தா, மகன், பேரன் என 8 பேர் வரைக்கும் கூட கூட்டுக் குடும்பங்களாக நெருக்கடியில் வசிக்கின்றனர். இலவச வீட்டுமனைப் பட்டா,வீடு இல்லாதவர்களுக்கு வீடு, பழுதடைந்த வீடுகளுக்கும் மாற்றாக தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அரசு அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஆடு,மாடுகள் மேய்க்கவும் காய்ந்த விறகுகள் சேகரிக்க வும் வன அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. தர மறுப்பவர்கள், மலைப்பிரதேசங்களில் வாழ்வதற்கு அனுமதி இல்லை ஊரை காலி செய்யுங்கள் என மிரட்டி வருகின்றனர். அதிகாரிகள் கொடுமை தாங்க முடியாமல் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த 12 குடும்பம் வாழ்விடத்தை காலி செய்து எங்கு போனார் கள் என்பதை கூட அறிந்து கொள்ள முடிய வில்லை. இந்நிலையில், ஈரண்ணன் தொட்டி கிராமத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கிளை அமைப்பு கூட்டம் நடை பெற்றது. இதில் மாநிலத் துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம், மாவட்டச் செயலாளர் குமரவடிவேல் ஆகியோர் கலந்து கொண்ட னர். கிளை தலைவராக பாலகுண்டப்பா, செயலாளராக மாதப்பா பொருளாளராக சித்தமாதப்பா தேர்வு செய்யப்பட்டனர். இந்த கூட்டத்தில், வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும்,பழுதான வீடுகளுக்கு மாற்று வீடுகள் கட்டித் தர வேண்டும் ஆடு மாடுகள் மேய்வதற்கு வன அதிகாரிகள் லஞ்சம் கேட்டு மிரட்டு வதையும், குடியிருப்புகளை விட்டு மலைவாழ் மக்களை வெளியேற்ற முயற்சிப்பதையும், தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.