கள்ளக்குறிச்சி,ஜன.3 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள ம.குன்னத்தூர் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் 146 நபர்களுக்கும், கிளியூரில் 9 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த பட்டாக்களை இது வரைக்கும் கிராம கணக்கில் பதிவு செய்யவில்லை. தலித் மக்களுக்கு வழங்கப் கட்ட இலவச வீட்டுமனை பட்டாக் களை கிராம கணக்கில் பதிவு செய்யக்கோரியும், கிளியூர் காலனி யில் கிராம நத்தம் சர்வே எண் 302இல் குடியிருக்கும் மக்க ளுக்கு பூவனூர் கிராம நத்தத்தில் குடியிருக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று (டிச.3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, கிளியூர் கிராமத்தில் வழங்கிய கோரிக்கை மனுவில் 6 பேருக்கு இன்னும் 15 நாட்களில் வட்டாட்சியர் மூலம் நத்தம் பட்டா வழங்கப்படும் என்றும் 9 நபர்களின் வீடுகள் குறித்து மாவட்ட வருவாய் அலு வலர் உத்தரவு பெற்று பட்டா வழங்கப்படும் என்றும் உறுதி யளித்தனர். மேலும் ம.குன்னத்தூர் கிராமத்தில் வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாவை ஒரு மாதத்திற்குள் கணக்குகளை திருத்தம் செய்து வகை மாற்றம் செய்ய மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். இதை யடுத்து, போராட்டத்தை கைவிட்ட னர். இந்த போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கே பூவராகன், ஒன்றியச் செயலாளர் ஆர்.சீனிவாசன், வி.பால கிருஷ்ணன், கிளை செயலாளர்கள் பி.கொடியான். பி. ஹரி.கே. சீனி வாசன், கே.ரங்கராயர், எஸ்.ராஜேந்திரன், ஜி.கோவிந்தன், கே.ஏழுமலை, ஏ.ஜெயந்தி, கே. கலைச்செல்வி மற்றும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.