districts

நோட்டீஸ் கொடுக்க வந்த அதிகாரிகள்: மக்கள் எதிர்ப்பால் திருப்பிச்சென்றனர்

சென்னை, ஜூலை 11 - குரோம்பேட்டை வீரராகவன் ஏரியை சற்றியுள்ள குடியிருப்புகளுக்கு திங்களன்று  (ஜூலை 11) நோட்டீஸ் கொடுக்க வந்த அதிகாரிகளை மக்கள் தடுத்து நிறுத்தினர். தாம்பரம் மாநகராட்சி (முன்பு பல்லாவரம்  நகராட்சி) குரோம்பேட்டையில் வீரராகவன் ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி 28, 29, 30  ஆகிய வார்டுகளை சேர்ந்த இந்திராநகர், செல்லியம்மன் நகர், பெரியார் தெரு, மீனாட்சி தெரு, ஏரிக்கரை தெரு, புதுத் தெரு 3வது குறுக்குத்தெரு, கோப்பெருந் தேவி தெரு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த ஏரியில் குடியிருப்புகளில் இருந்து  சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நபர் ஒருவர் புகார் அளித்தார்.  அதை ஏற்றுக் கொண்ட தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அறிக்கை கேட்டது. பாதாள சாக்கடை திட்டப் பணி களில் உள்ள குறைபாடு மற்றும் குடியிருப்பு களில் இருந்து வரும் கழிவுநீர் ஏரியில் கலப்ப தாக வாரியம் அறிக்கை தாக்கல் செய்தது. இதனிடையே பல்லாவரம் நகராட்சி, தாம்பரம் மாநகராட்சியாக மாறியது. இந்த  வழக்கிற்கு சம்பந்தமே இல்லாமல், ஏரியை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளின்  எண்ணிக்கையை குறிப்பிட்டு ஆக்கிரமிப் பாளர்களை வெளியேற்ற நோட்டீஸ் வழங்கி, ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் என தீர்ப்பாயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரிக்கு அருகே அமைந்துள்ள குடியிருப்புகள் தரிசு புஞ்சை (சர்வே எண்.391) என்று இருந்ததை 1985ல்  நீர்பிடிப்பு என வகைமாற்றம் செய்யப் பட்டுள்ளது. இந்த சர்வே எண்ணை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் குடியிருப்பு பகுதி என வரையறுத்துள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு குடியிருப்புக ளுக்கு நோட்டீஸ் கொடுக்க மாநகராட்சி நகர  ஊரமைப்பு அலுவலர் பாஸ்கர் தலைமையில்  அதிகாரிகளை சாலையை மறித்து மக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் கடும் வாக்கு வாதம் நிலவியது. இதனால் வேறுவழி யின்றி அதிகாரிகள் திரும்பி சென்றனர். இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிர பாகரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.நரசிம்மன், எம்.தாமோதரன், திமுக ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், மதிமுக  மாவட்டச் செயலாளர் மா.வை.மகேந்திரன் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தீர்மானம் நிறைவேற்றுக!
அதேசமயம் தாம்பரம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜி.விஜயலட்சமி (28வது வார்டு), திமுக உறுப்பினர் சண்முகசுந்தரி (29வது வார்டு) ஆகியோர் பேசுகையில், வீரராகவபுரம் ஏரியை சுற்றியுள்ள உள்ள குடியிருப்புகளை பாதுகாக்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.