சிதம்பரம், பிப். 7- கீரப்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் செல்லையாவின் மனைவி சந்திரா (49) ஞாயிறன்று (பிப். 6) காலமானார். சி. சாத்தமங்கலம் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், உதயகுமார், ரமேஷ்பாபு, ரவிச்சந்திரன். தேன்மொழி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், n ஜயசித்ரா, முத்துக்குமாரசாமி, பிரகாஷ், புவனகிரி ஒன்றியச் செயலாளர் ஸ்டாலின், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் நெடுஞ்சேரலாதன், சிவராமன், சிவனேசன், செம்மலர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.