districts

img

முதியவர் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு

கள்ளக்குறிச்சி,மே.11 - உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மனந்தல் கிராமத்தில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த துரும்பர் இனத்தைச் சேர்ந்த 85 வயதான அந்தோணிசாமி என்ற முதியவரின் உடலை பட்டியல் சமுதாயத்தினர் பயன்படுத்தி வரும் சுடுகாட்டில் அடக்கம் செய்ய விடு தலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். செம்மனந்தல் கிராமத்தில்  துரும்ப நகரில் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில்  வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை இரவு உயிரிழந்த அந்தோணிசாமி என்ற முதியவர் உடலை வெள்ளிக்கிழமை செம்மனந்தல் பட்டி யல் சமூகத்தினர் சுடுகாட்டில் அடக்கம் செய்ய அவரது உறவி னர்கள் முடிவு செய்தனர்.  அதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர்.  இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டதோடு அந்தோணி சாமியின் உடல் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் அடக்கம் செய்யாமல் வீட்டிலேயே வைக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டதால்  தகவ லறிந்து வந்த உளுந்தூர்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ் மற்றும் திருநாவலூர் காவல்நிலையத்தினர் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி னர். அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் அந்தப் பகுதி யில் உள்ள மாற்று இடத்தில் அந்தோணிசாமி உடலை அடக்கம் செய்ய காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை யினர் கேட்டுகொண்டனர்.  அதனை துரும்பர் சமூக மக்கள் அந்தோணி சாமியின் உடலை அடக்கம் செய்த னர். இதனால் கிராமத்தில் பதற்றம் தணிந்து அமைதி திரும்பியது.