சட்ட தின விழாவையொட்டி காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி செம்மல் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இளம் வழக்கறிஞர்களுக்கு புத்தகங்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், சத்தியமூர்த்தி, சங்க தலைவர்கள் ஹரிதாஸ், கார்த்திகேயன், சிவ கோபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.