சென்னை, டிச.18 - எண்ணை ஆயில் படிந்த குடியிருப்புகளை முழுமை யாக கணக்கெடுக்க வலி யுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மிக்ஜம் புயல் வெள்ளத் தால் திருவொற்றியூர் மேற்கு பகுதியான 4, 6, 7 வார்டுகள் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். மேலும் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகள் ராஜாஜி நகர் முதல் முகத்துவாரம் வரை தண்ணீரில் படர்ந்து வந்தது. மணலி எக்ஸ்பிரஸ் சாலையின் இருபுறமும் இருக்கும் குடியிருப்பு களிலும் எண்ணெய் புகுந்தது. இதனால் 4ஆவது வார்டு ஆதிதிராவிடர் காலணி, திருவீதியம்மன் நகர், நியூ காலனி, கிரிஜா நகர், பிருந்தாவன் நகர் விஸ்தரிப்பு, முருகப்பா நகர், ஜோதி நகர், டி.எஸ்.கோபால் நகர், வி.பி. நகர் பகுதி களில் ஆயில் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அவர் கள் இன்று வரை வீட்டில் வசிக்க முடியவில்லை. சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எண்ணை படலத்தால் பாதிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு இழப்பீடு அளிக்க கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் ஜோதி நகர், முருகப்பா நகர், கிரிஜா நகர், டி.எஸ்.கோபால் நகர் விடுபட்ட தாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதி காரிகளிடம் கேட்டபோது அங்கு எண்ணெய் போக வில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த ஜோதி நகர் மக்கள் மணலி எக்ஸ்பிரஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தாங் காடு காவல் நிலைய ஆய்வாளர் கேட்டுக் கொண்டதின் பேரில் போக்கு வரத்திற்கு இடையூறு இன்றி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் வடக்கு வட்டார துணை ஆணையர் நேரில் வரவேண்டும், இல்லை யென்றால் காத்திருப்பு போராட்டம் தொடரும் என அறிவித்தார். இதையடுத்து காவல் நிலைய ஆய்வாளர், துணை ஆணையர் வடக்கு கத்தா ரவி தேஜாவுக்கு இது குறித்து தகவல் தெரிவித் தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் ஜோதி நகர், டி.எஸ்.கோபால் நகர், முருகப்பா நகர், கிரிஜா நகர் பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட வீடுகளை முழுமையாக கணக்கெடுக்கும் படி உத்தரவிட்டார். இதில் ஜோதி நகர் நிர்வாகிகள் உதயகுமார், மோணி, ஏழுமலை, டி.எஸ். கோபால் நகர் நிர்வாகி ரவி, கிரிஜா நகர் நிர்வாகி சுப்பிரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், பகுதிக்குழு உறுப்பினர் வெங்கட்டையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.