புதுச்சேரி, ஆக. 24-
ராஜீவ் காந்தி பொறி யியல் கல்லூரி ஊழியர்க ளுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
புதுச்சேரி பாகூர் கொம்யூன் கிருமாம் பாக்கம், ராஜீவ் காந்தி பொறி யியல் கல்லூரி ஊழியர்க ளுக்கு கடந்த 9 ஆண்டு களாக உயர்த்தப்படாத ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். பண்டிகை கால உதவித் தொகை மற்றும் ஊழியர்க ளின் குடும்பத்தாருக்கு வழங்க வேண்டிய ஈமச் சடங்கு நிதி ஆகியவை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டம் நடை பெற்றது. சங்க நிர்வாகிகள் கதிரேசன், அமுதா, மின்னலா, ஜெயந்தி, ராம ஜெயம், வள்ளி உள்ளிட்ட திரளானோர் போராட் டத்தில் பங்கேற்றனர்.
கிருமாம்பாக்கம் ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரி வளாகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு செயலாளர் கந்தன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில துணைத் தலைவர் கொளஞ்சியப்பன் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார்.