ஆயுத கடத்தல் வழக்கில் சினிமா பைனான்சியர் கைது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை, பிப். 17- ஆயுத கடத்தல் வழக்கில் கைதான சினிமா பைனான்சியர் ஆதி லிங்கத்தின் மீது என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கேரள மாநிலம் விழிஞ்சம் கடல் பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு சிறிய வகை படகு மூலம் கடத்தி வரப்பட்ட 327 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 துப்பாக்கிகள் பறி முதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் 10க்கும் மேற்பட்டோரை என்ஐஏ அதிகாரி கள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் எல்டிடிஈ அமைப்பை மீண்டும் புத்துயிர் பெற வைப்பதற்காக ஆயுதங்கள் மற்றும் நிதி திரட்டுதல் போன்ற விவகாரத்தில் ஈடுபட்டதும், அதற்காக சர்வதேச போதை பொருள் கும்பலுடன் சேர்ந்து போதை பொருள் கடத்தப்பட்டதும் தெரியவந்தது. மேலும் இவர்களுடன் தொடர்புடைய சென்னை சேலையூரை சேர்ந்த ஆதிலிங்கம் என்பவரை 14ஆவது நபராக என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள முக்கிய போதைபொருள் கடத்தல் மன்னன் குணசேகரனின் பினாமியாக செயல்பட்டதும் தெரியவந்தது. மேலும் நடிகை ஒருவருக்கு உதவியாளராக செயல்பட்டதும் தெரிய வந்தது. குறிப்பாக போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தை குணசேகரன் மூலம் ஆதிலிங் கம் பல்வேறு சட்டவிரோத பணப்பரி மாற்றம் மேற்கொண்டது தெரியவந்தது. சட்டவிரோதமாக சம்பாதித்து பணத்தை சினிமாவில் உள்ள பல்வேறு பைனான்சி யர்களுக்கு படம் தயாரிப்பதற்கு கொடுத்த தும், சினிமா மற்றும் அரசியல் பிரமுகர் களுக்கு கட்சி நிதியாக வழங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஆதிலிங்கத்தை என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆதிலிங்கம் மீது என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 16 பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 14 ஆவதாக ஆதி லிங்கத்தின் மீது குற்றப்பத்திரிகை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்துள்ளது.
நீலகிரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது
சென்னை. பிப்,17- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமை காலை 11 மணியளவில் பேசின் பிரிட்ஜ் வழியாக யார்டுக்கு சென்ற நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், தடம் புரண்டு விபத்துக் குள்ளானது. பேசின் பிரிட்ஜ் வழியா கச் சென்று கொண்டிருந்த போது, சாணிக்குளம் பகு திக்கு அருகே இன்ஜினின் முன் பக்க மூன்று ஜோடி சக்கரங்கள் தண்டவாளத் திலிருந்து கீழே இறங்கி இந்த விபத்து நிகழ்ந்துள் ளது. இது குறித்து ரயில் ஓட்டு நர், ரயில்வே துறை அதிகாரி களுக்குத் தகவல் தெரி வித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள். தண்டவாளத்தி லிருந்து கீழே இறங்கிய மூன்று ஜோடி சக்கரங்களை மீண்டும் தண்டவாளத் திற்குத் தூக்கி வைக்கும் பணிகளை மேற்கொண்ட னர். இந்த விபத்தில் யாருக் கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் தண்டவாளங் களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர் ஏற்கெனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் ஆட்கள் இல்லா மல் சென்ற ரயில் சக்கரம் ஒன்று தடம் புரண்டு விபத் துக்குள்ளானது குறிப்பிடத் தக்கது.
குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்: பெருநகர காவல்துறை
சென்னை, பிப். 17- குழந்தை கடத்தல் சம்பவங்கள் வடசென்னை பகுதியில் அதிகளவு நடப்பதாக பரவும் காணொளிகள் சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. இவை பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், சென்னை பெருநகர காவல்துறை தரப்பில், “இது போன்ற காணொளிகளை கண்டு மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்” என்று கேட்டுகொள்ளப் பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக சில நபர்கள். குழந்தை களை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதை காண முடிகிறது. இதுபோன்ற காணொளிகள் மக்களிடையே அச்சத்தையும். பீதியையும் உருவாக்க வேண்டும் என்ற பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்பட்டு வரு கின்றன என்பதை சென்னை பெருநகர காவல் உறுதிபட தெரிவித்து கொள் கிறது. இதுபோன்ற போலியான செய்தி களை கேட்டோ, காணொளிகளை பார்த்தோ பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதற்றமடையவோ தேவையில்லை என்று சென்னை பெரு நகர காவல்துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. பொதுமக்களுக்கு இது சம்பந்த மாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் சென்னை பெருநகர காவல் துறை உதவி எண் 100 அல்லது 112 கட்டண மில்லா தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதுபோன்ற பொய்யான செய்தி களை பரப்புவோர் உடனடியாக இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறினால் அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெரு நகர காவல் துறை எச்சரிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
சென்னையில் இன்று 44 ரயில்கள் ரத்து
சென்னையில் இன்று 44 ரயில்கள் ரத்து சென்னை,பிப்.17- சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை யிலான வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் ஞாயிறன்று (பிப்,18) 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படு கிறது. காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை குறிப்பிட்ட இந்த வழித்தடத் தில் ரெயில்கள் இயக்கப் படாது. கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரையி லான வழித்தடத்தில் பரா மரிப்பு பணிகள் நடைபெற வுள்ளதால் மின்சார ரயில் கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப் படும் ரெயில் சேவை சனிக் கிழமை முதல் 6 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இதேபோல் வரும் 22-ந்தேதி வரை இரவு 10.45 மணி முதல் காலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே யான புறநகர் மின்சார ரயில் கள் ரத்து செய்யப்படுகிறது. கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 8.15, 8.20, 9.30 ஆகிய நேரங் களில் இயக்கப்படும் ரயில் சேவைமுழுவதும் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம்-கடற்கரைக்கு இரவு 11.15 மணிக்கு பின், புறப்படும் புறநகர் ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
பெண் காவலரின் விழிப்புணர்வு பாடல்
பெண் காவலரின் விழிப்புணர்வு பாடல் ஆவடி, பிப்,17- ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் சசிகலா, போதைக்கு எதிராக தான் எழுதிய பாடல் ஒன்றை அவரே அழகாக பாடி, அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ, சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. பெண் காவலர் சசிகலாவின் போதைக்கு எதிரான இந்த முயற்சிக்கு நெட்டி சன்கள் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.
5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை
5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை சென்னை, பிப். 17- ஆந்திர மாநிலம் நெல்லூரில் கடந்த 17ஆம் தேதி 10 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் உயிரிழந்துள்ளது. பறவை காய்ச்சல் காரண மாகவே பறவைகள் உயி ரிழந்திருப்பது ஆய்வில் உறுதியானது. இதையடுத்து திரு வள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்க ளுக்கு பறவை காய்ச்சல் குறித்து அலெர்ட் விடுக்கப் பட்டுள்ளது. மேலும் அண்டை மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்கும் படி தமிழ்நாடு சுகாதாரத் துறை இயக்குநர் உத்தர விட்டுள்ளார்.