districts

சென்னை முக்கிய செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கு  இன்று முதல் புதிய அடையாள அட்டை

சென்னை, நவ. 21 - சாலையோர வியாபாரிகளுக்கு சிப் பொருத்திய புதிய அடையாள அட்டை நவ.22 முதல் மண்டல அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்துதல், சட்டம் விதிகளை பின்பற்றி நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 35 ஆயிரத்து 588 சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக, சிப் பொருத்திய, துலங்கு குறி (கியூஆர் கோட்) மற்றும் இணைய இணைப்பு (வெப் லிங்) பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இந்த புதிய அடையாள அட்டை நவ.22ந் தேதி தொடங்கி, 30ந் தேதி வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்படும். இந்த சிறப்பு முகாமிற்கு வரும் வியாபாரிகள், மாநகராட்சி ஏற்கெனவே வழங்கிய சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் கைபேசியினை கொண்டு வர வேண்டும். அந்த கைபேசி எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும். கைபேசி எண் மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பழைய அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு புதிய அடையாள அட்டை வழங்கப்படும். இவ்வாறு மாநகராட்சி செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசைக்காரர் கொல்லப்பட்ட  வழக்கில் இளைஞர் கைது

சென்னை, நவ. 21- மயிலாப்பூர் சாந்தோம் பேராலயத்தின் அருகே நடைமேடையில் பிச்சைக்காரர்கள் இரவு படுத்து தூங்குவது வழக்கம்.  கடந்த 17ஆம் தேதி அங்கு தூங்கும் பிச்சைக்காரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒரு நபர் தாக்கியதில், கேரளத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் சுகு (62) என்பவர் பலத்தக் காயமடைந்தார். அங்கிருந்தவர்கள், சுகுவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சுகு, கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது வேளச்சேரி மயிலை பாலாஜி நகரைச் சேர்ந்த ஆனந்த் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் ஆனந்தை வியாழக்கிழமை கைது செய்தனர்.

சென்னையில் இன்று மின்தடை

சென்னை, நவ.21- சென்னையில் வெள்ளியன்று(நவ.22) பராமரிப்பு பணிகள் காரணமாக வில்லிவாக்கம் சிட்கோநகர் 1 முதல் 10 பிளாக், அம்மன்குட்டி, நேரு நகர், தெற்கு & வடக்கு ஜெகநாதன் நகர், எம்.டி.எச் சாலை, சிட்கோ தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தில் ஆசிரியர் கொலை  ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கண்டனம் 

சென்னை, நவ. 21- தஞ்சையில் பள்ளி வளாகத்தில் ஆசி ரியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை யில், தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேலநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மூலமாக நியமிக்கப்  பட்டு பணிபுரிந்து வந்த ரமணி என்ற ஆசிரியை பள்ளி வளாகத்தில் காட்டு மிராண்டி ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்டுமிராண்டி செயலை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. பள்ளி வளாகம் என்பது மிகவும் புனிதமான இடம். அந்த வளாகத்துக் குள்ளாகவே புகுந்து ஆசிரியையை கொலை செய்யும் அளவுக்கு துணிச்சல் வந்திருப்பது என்பது ஏற்க இயலாதது.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  விரைந்து செயல்பட்டு கொலையாளி மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என்று அறிவித்திருப்பது சற்று ஆறுதலாக இருந்தாலும் இது போன்ற செயல்கள் இனியும் நடைபெறாத வண்ணம் பணி பாதுகாப்புச் சட்டத்தை விரைவில் தமிழ்நாட்டில் கொண்டுவர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆங்காங்கே மாணவர்கள் ஆசிரி யர்களை தாக்குவதும், சில சமூக விரோதி கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து தகாத வார்த்தைகளை பேசுவதும் நடந்து வந்த சூழலில், தற்போது வளாகத்தின் உள்ளேயே கொலை செய்யும் அளவுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது வேதனைக்குரியது. ஆசிரியர் இனத்தின் மீது மிகுந்த பற்று கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் இதில் சிறப்பு கவனம் எடுத்து விரைந்து ஆசிரி யர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பெருமாள் - செங்கல்பட்டு இடையே கூடுதல் பேருந்துகள் இயக்கம் 

சென்னை, நவ.21  சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே புதனன்று பிற்பகலில் இருந்து நவ .23 ஆம் தேதி வரை புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே நவம்பர் 20 முதல் 23-ம் தேதி வரை பராமரிப்பு பணி நடப்பதால், பிற்பகல் 1.10 முதல் மாலை 4.10 மணி வரை சென்னை கடற்கரை யில் இருந்து செங்கல்பட்டு செல்ல வேண்டிய புறநகர் மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே, அந்த வழித்தடத்தில் செல்லும் பயணிகளின் நலன் கருதி, சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து செங்கல்பட்டு பேருந்து நிலையத்துக்கு தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேவைக்கேற்ப கூடுதல் பேருந்து: தேவைக்கேற்ப அதிக பேருந்துகளும் இயக்கப்படும். இரு இடங்களிலும் அலுவலர்களை நியமித்து பேருந்து இயக்கத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காவல் நிலைய சுற்றுச்சுவர் மீது பாய்ந்த பேருந்து

சென்னை, நவ. 21- அடையாறு எல்.பி. சாலையில் மாநகர பேருந்து பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் குணசேகர் (50) என்பவர் தொழில் நுட்ப பணியாளராக (மெக்கா னிக்) வேலை செய்தார். பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக குணசேகருக்கு, கடந்த 10 நாள்களாக  பணி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், குண சேகர் வியாழக்கிழமை அதி காலை, அடையாறு பணி  மனைக்கு வந்துள்ளார். வந்த வர் அங்கிருந்த ஊழியர்க ளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  ஒரு  மாநகர பேருந்தை எடுத்துள்ளார். இதைப் பார்த்த போக்குவரத்து ஊழி யர்கள் அதிர்ச்சியடைந்த னர். மேலும் அந்த  பேருந்தை அதிவேக மாக தாறுமாறாக இயக்க ஆரம்பித்தார்.  இதில், கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, பணிமனை நேரெதிரில் உள்ள அடை யாறு காவல்  நிலைய சுவரின் மீது மோதியது. விபத்தில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும், சுற்றுச் சுவர் அருகே நிறுத்தப்  பட்டிருந்த வாகனங்களும் சேதம் அடைந்தன. அள வுக்கு அதிகமான மது போதையில் இருந்த குண சேகர், இச் செய  லில் ஈடு பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, போக்கு வரத்து கழக அதிகாரி கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.