districts

புதிய ராக இசை நிகழ்ச்சி

சென்னை, அக்.9 கணபதி சச்சிதானந்தா சுவாமிகளின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் 80 கர்நாடக சங்கீத வித்வான்களின் தத்தப்பிரியா என்ற புதிய ராக இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள நாரதகானா சபாவில் வரும் 15ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 5மணி முதல் இரவு 9மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காரைக்குடி மணி தலைமையில் கர்நாடக இசை பாடகர் சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ, தமிழ்நாடு இசைக்கல்லூரி முன்னாள் முதல்வரும் மிருதங்க வித்வானுமான திருவாரூர் பக்தவத்சலம், பிரபல பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில பங்கேற்கிறார்கள். சச்சிதானந்தா அறக்கட்டளை சார்பில் வேளச்சேரியில் மருத்துவ முகாமிற்கும் பார்வைக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச பரிசோதனை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாகவும் அறக்கட்டளையின் நிர்வாகி சுரேஷ் கோபாலன் தெரிவித்துள்ளார்.