districts

தூய்மை பணியில் அலட்சியம் தனியார் நிறுவனங்கள் மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

சென்னை, டிச. 28 - தூய்மை பணிகளில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனங்கள் மீது மாமன்ற உறுப்பினர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 3 மண்டலத்தில் ராம்கி நிறுவனமும், 7 மண்டலத்தில் உர்பேசர் சுமித் நிறுவனமும் தூய்மை பணி செய்து வருகிறது. இந்த இரண்டு நிறு வனங்களும் முறையாக தூய்மை பணி களை செய்வதில்லை தொடர்ந்து மன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்து வரு கின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் புதனன்று (டிச.28) மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் பேசிய உறுப்பினர் தீர்த்தி, ‘ராம்கி நிறு வனத்தில் எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள்? ஒரு பணியாளர் எத்தனை வீடுகளை சுத்தம் செய்கிறார் என்பன போன்ற கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட நிர்வாங்கள் பதிலளிப்பதில்லை என்றார். இதற்கு பதில் அளித்த மேயர், 3 மண்டலத்தில் ராம்கி நிறுவனம் தூய்மை பணிகளை செய்து வருகிறது. ஊழியர்கள் குறைபாடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, இந்தப் பிரச்சனையில் நேரடியாக கண்காணிப்பு செய்வார் என்றார். ராம்கி நிறுவனத்தில் பணியாளர்கள் குப்பைகளை சரியாக சுத்தம் செய்வ தில்லை. இது தொடர்பாக ராம்கி அதி காரியை தொடர்பு கொண்டால், அழைப்பை எடுப்பதில்லை என்று உறுப்பி னர் திரவியமும் குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து பேசிய உறுப்பினர் கிரிதரன், உர்பேசர் சுமித் நிறுவனமும் சரிவர செயல்படுவதில்லை என்றார். இவற்றிற்கு பதிலளித்த ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தூய்மைப் பணி தொடர்பாக 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது. மண்டலக் கூடங்க ளில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மண்டல கண்காணிப்பாளர்களை கலந்து கொள்ள உத்தரவிடுகிறோம். தூய்மைப் பணி யாளர்களை கண்காணிக்க ஒரு செயலி (ஆப்) உருவாக்கப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் அது முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் போது இதுபோன்ற பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்றார்.