districts

நீட் தேர்வு: தமிழகத்தில் 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்சென்னை

சென்னை,மே 27- எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய இளநிலை மருத்துவ  படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் அடுத்த மாதம் (ஜூன்) 17 ஆம் தேதி நடைபெறுகிறது.  2022 ஆம் ஆண்டுக்கான நீட்  நுழைவுத்தேர்வை எழுத மொத்தம்  18,72,339 பேர் விண்ணப்பித் துள்ளனர். இவர்களில் 10.64 லட்சம் பேர் ஆண்கள். 8.07 லட்சம் பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 1.69 லட்சம் மருத்துவ இடங்களுக்கு அவர்கள் விண்ணப் பம் செய்துள்ளனர். நீட் தேர்வு எழுதுவதற்காக கடந்த ஆண்டை விட கூடுதலாக 2.57 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத 1, 42,286 பேர்  விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழில் எழுத 31,803 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த ஆண்டு நீட் தேர்வை தமிழில் எழுதுவதற்கு விண்ணப்பித்து இருப்பவர்களின் எண்ணிக்கை 60 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட 2.6 லட்சம்  பெண்கள் நீட் தேர்வை எழுது கிறார்கள். இது 41 விழுக்காடு அதிகமாகும். கோவிட் தொற்று காலமான கடந்த 2020 ஆம் ஆண்டு நீட்  தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 78,060 ஆகும். தமிழ கம் மற்றும் ராஜஸ்தானில் தலா 1.4 லட்சம் பேரும், கர்நாடகாவில் 1.3 லட்சம் பேரும், கேரளாவில் 1.2 லட்சம் பேரும் நீட் தேர்வை எழுதுகிறார்கள்.