districts

img

ஊதிய நிலுவை கேட்டு நவ்லாக் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ராணிப்பேட்டை, ஜன. 10 - ராணிப்பேட்டை மாவட்டம் நவ்லாக் விவசாயப் பண்ணையில் 50 தொழி லாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்க ளுக்கு கடந்த 4 மாதமாக ஊதியம்  வழங்கப்படவில்லை. இதையடுத்து 4 மாத ஊதிய நிலுவையை வழங்கக் கோரியும், மாவட்ட ஆட்சியர் அறிவித்த கடந்த 2021 முதல் வழங்க வேண்டிய குறைந்தபட்ச கூலி உயர்வு, பொங்கல் போனஸ் வழங்கக் கோரியும் வேளாண் அதிகாரிகளிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் எந்த சுமூக தீர்வும் ஏற்படவில்லை. இதையடுத்து நவ்லாக் பண்ணை தொழிலாளர்கள் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எல்.சி.மணி, சிபிஎம் மாவட்ட அமைப்புகுழு கன்வீனர் என்.காசிநாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று (ஜன. 10) மனு அளிக்க சென்றனர். மனு அளிக்கச் சென்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) சங்க நிர்வாகிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உடனடியாக  திங்கட்கிழமை மாலைக்குள் 4 மாத நிலுவை ஊதியம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று உறுதி யளித்ததன் பேரில் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதில் விவசாயிகள் சங்க வட்டாரத் தலைவர் நிலவு குப்புசாமி, செயலாளர் என்.ரமேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.