தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும் தொழிலாளர் நலச்சட்டத்தை சீர்குலைத்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. இதனை செஙகல்பட்டு மாவட்டத்தில் வெற்றிகரமாக்குவதற்கான ஆயத்த மாநாடு ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் எம்.ஜஹாங்கீர், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி ஆகியோர் தலைமையில் சனிக்கிழமை (ஜன 29) செங்கல்பட்டில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி ஏஐடியுசி தேசிய செயலாளர் வகிதா நிஜாம், மாநில துணை பொதுச்செயலாளர் கே.இரவி, சிஐடியு மாநில துணைப் பொதுசெயலாளர் எஸ்.கண்ணன், ஏஐசிசிடியு சிறப்பு தலைவர் சொ.இரணியப்பன், எல்டியுசி மாவட்டச் செயலாளர் கே.கோபால் தொழிலாளர் ஒற்றுமை இயக்க நிர்வாகி கபிலன் உள்ளிட்டோர் பேசினர். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் எம்.சங்கையா நன்றி கூறினார்.