அன்னை இந்திரா காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு தின விழாவாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. எல்லைப் பிள்ளை சாவடி விழுப்புரம் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பெ.ராஜவேலு, அரசுகொறடா , சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதி மொழியை முதல்வர் ரங்கசாமி வாசிக்க அனைவரும் உறுதி ஏற்றுக் கொண்டனர்.