அம்பத்தூர், ஜன. 3- ஆவடி மாநகராட்சி சார்பில் 1ஆவது வார்டு முத்தாபுதுப்பேட்டை சமுதாயக் கூடத்தில் புதனன்று அந்த திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது. ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்தார். முகாமில் வருவாய் துறை சார்பில் வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், சாதி, வருமான சான்று, உள்ளிட்ட சான்றுகளுக்கு பொதுமக்கள் ஆன்லைன் விண்ணப்பம் அளித்தனர். நகராட்சி சார்பில் சொத்து வரி, சொத்து வரி பெயர் மாற்றம், வீட்டு மனை அனுமதி, கட்டிட வரைபட அனுமதி கேட்டு ஆன்லைன் விண்ணப்பம் அளித்தனர். அதேபோல் வீட்டு வசதி வாரியம், மின்சார வாரியம், காவல் துறை உள்ளிட்ட துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டனர். இதில் மேயர் உதயகுமார், ஆணை யாளர் ஷேக் அப்துல் ரஹ்மான், துணை ஆணையர் சங்கரன், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஐவண்ணன், ஆவடி வட்டாட்சியர் விஜயகுமார், மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் அன்பழகன், மண்டலக்குழு தலைவர்கள் அம்மு பொன் விஜயன், அமுதா சேகர், வார்டு கவுன்சிலர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.