சென்னை,மே 18-
சென்னை நேப்பியர் பாலம் அருகே கடல் முகத்துவாரத்தில் கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் கூவம் ஆற்றின் தண்ணீரும் கடலுக்குள் செல்ல வழியில்லாமல் தேங்கி காணப்படுகிறது. இந்நிலையில் கடல் அரிப்பை தடுக்க சென்னை நேப்பியர் பாலம் அருகே கடல் முகத்துவார பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இந்த பணிகளுக்காக நேப்பியர் பாலம் அருகே 200 கான்கிரீட் (டெட்ராபாட்) கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் 3 ஆயிரம் டெட்ராபாட் கற்கள் கொண்டுவரப்பட உள்ளன. இந்த தடுப்புச்சுவர் பெரிய அலை களை தாங்கும் வகையில் உறுதியாக அமைக்கப்படுகிறது. இப்பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இது கூவத்தை சுத்தப்படுத்தும் திட்டமாகும். குறைந்த அளவிலான அலையின்போது கூவம் ஆற்றின் தண்ணீர் சீராக கடலில் கலக்கும். பெரிய அலைகளின் போது கடலில் உள்ள நீர் கூவத்தில் பாயும். இதனால் கூவம் ஆற்றின் நீர் இயற்கையாகவே சுத்தமாகி றது. பெரிய அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டு கரையை அடையும்போது இந்த தடுப்புச்சுவர் அலையின் வேகத்தை குறைக்கின்றன. இதனால் கரையில் மண் அரிப்பு ஏற்படாது. ஏற்கெனவே கடலும் ஆறும் சந்திக்கும் முகத்துவாரத்தில் ஆற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மணலை கொண்டு வருகிறது.
இதனால் எந்திரத்தை பயன் படுத்தி மண் மற்றும் சேற்றை அகற்ற வேண் டும். அப்போதுதான் கூவம் தண்ணீர் கடலுக் குள் செல்லும். இந்த தடுப்பு சுவர் அமைப்ப தால் கடலில் இருந்து வரும் மண்ணின் அளவு குறையும். இதனால் கூவத்தில் உள்ள தண்ணீர் தடையின்றி கடலில் கலக்கிறது. 3 முதல் 4 மாதங்களில் இந்த பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.