districts

img

தேர்தலைக் கூட மக்களுக்கான போராட்ட களமாகத்தான் சிபிஎம் பார்க்கிறது

 திருவள்ளூர், டிச 28- தேர்தலை கூட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மக்களுக்கான போராட்ட களமாகவே பார்க்கிறது என்று கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூறினார். கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தைத் கொண்டு வரவேண்டும், ஜெய்ஹிந் நகர் பூங்கா நிலத்தை ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும், குடிமனை பட்டா வழங்க வேண்டும், சுகாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு உள்ளதை சீரமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (டிச.27)கும்மிடிப்பூண்டி பஜாரில் மாநாடு நடை பெற்றது. மாநாட்டிற்கு நகர கிளை செயலாளர் வி.ஆர்.லட்சுமணன் தலைமை தாங்கி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன் துவக்கி வைத்து  பேசினார்.வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், வட்ட குழு உறுப்பி னர்கள் ப.லோகநாதன், டி.கோபால கிருஷ்ணன், வி.குப்பன், பி.கிரிதர்,  6 வது வார்டு கிளை செயலாளர் ஜெ.ஆனந்தன் ஆகியோர் பேசினர். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குண சேகரன் பேசுகையில், மக்கள் நலக் கோரிக்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அன்றாடும்  போராடி வருகிறது.  ஆனால் அதிமுகவோ மக்கள் பிரச்சினைகள் குறித்த தீர்மா னங்கள் நிறைவேற்றாமல்,  ஒருவரை, ஒருவர் எப்படி கவிழ்ப்பது என்பதை திட்டமிடுவதற்கு பொதுக்குழுவை பயன்படுத்துகிறது. கும்மிடிப்பூண்டி ஜெய்ஹிந்த் நகரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பூங்கா நிலத்தை மீட்க தமிழக அரசும், பேரூராட்சி நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு தீர்வு காணவேண்டும்.  

மக்கள் போராடினால் கோரிக் கைகளை வெல்ல முடியும் என்பதற்கு  மாநிலம் முழுவதும் ஏராளமான அனு பவங்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு உண்டு. குடியிருப்போர் நலச் சங்கங்கள் குடும்பங்களுடன் போராடுவதும்,  சட்ட ரீதியான போராட்டங்களை நடத்தி பூங்காக்களை மீட்டெடுப்பதும் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கி றது. இதற்கு செங்கொடி இயக்கம்  உறு துணையாக இருக்கும். தேர்தல் களத்தை கூட மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி  மக்கள் போராட்டத் திற்கு உரிய களமாகத்தான் பார்க்கிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.கும்மிடிப்பூண்டி பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது. இதனை கடந்த ஆட்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.  சுகாதாரமான சூழல் உள்ள நகரமாக மாற்ற வேண்டும். ஒன்றிய அரசு நகரமயமாக்கல் கொண்டு  வருகிறது. நகரமயமாக்கல் என்பது  முதலாளிகளின் சொத்தை மேலும்,  கொழுக்க வைக்கிறது. சாதாரண மக்களை பற்றி கவலைப்படாத அரசாக ஒன்றிய பாஜக அரசு உள்ளது அதற்கு முடிவுகட்டவேண்டும் என்றார். திருத்தணி, சோழவரம், ஊத்துக் கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட பல  இடங்களில் இதே  போன்று கோரிக்கை மாநாடு நடைபெற்றது.