districts

img

கல்லூரி மாணவி மர்ம மரணம் குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல்துறை!

கள்ளக்குறிச்சி,செப்.10- பள்ளி மாணவி மரணத்திற்கு காரண மான காதலனையும் அவரது உறவினர் களையும் கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எலவனா சூர்கோட்டை பேருந்து நிலையத்தில் நடை பெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கோட்டை யூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் -ராதா  தம்பதியின் மகள் அபிநயா. ஜுலை 28 அன்று  மர்மமான முறையில் மரணமடைந்தார். மரணத்திற்கு காரணம் கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி மகன் வினோத் மணி என்பவர் அபிநயாவை கடந்த  மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய ததால் மனம் உடைந்தார் அபிநயா. இந்நிலையில் அவர் மர்ம்மான முறையில் உயிரிழந்தார். இந்த மரணத்திற்கு காரணமான வினோத்  மணி, வீரமணி, சிவகாமி, வேலு ஆகியோர் கள் மீது எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை காவல் துறையின் மெத்தன போக்கால் குற்றவாளிகள் ஒன்று கூடி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். கொலை வெறி பிடித்த கும்பலை கைது செய்யக் கோரியும், குற்றவாளிகளுக்கு துணை போகும் கவால்துறையை கண்டித் தும் கள்ளக்குறிச்சி வட்ட செயலாளர் வே.ஏழு மலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் கண்டன உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் வி.ரகுராமன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.மணி, செல்வராசு, நடேசன், தெய்வீகன் உள்ளிட்ட  பலர் பேசினர்.