கிருஷ்ணகிரி,மே.12- வேப்பனப்பள்ளி அருகே சின்னமன வாரணபள்ளி ஊராட்சி ஜிங்களூரில் 100 க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக ஊராட்சி குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடிய நிலையில் அரசு அதிகாரிகளிடமும், ஊராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை குடிநீர் கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.குடிநீர் இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளானதால் காலி குடங்களுடன் ஜிங்களூர் வேப்பனப் பள்ளி நெடுஞ்சாலையில் 100 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடு பட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.