திருவள்ளூர், நவ.29- அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் தனித் திறமையை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறை சார்பில் ஆண்டு தோறும் கலைத் திருவிழா நடை பெற்று வருகிறது. அண்மையில் மாநில அளவில் திருச்சியில் கலைத் திருவிழா நடை பெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே வங்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் டேனியேல் என்ற மாணவன் ஹார்மோனியம் வாசிப்பில் மாநில அளவில் முதலிடமும், டிரம்ஸ் வாசிப்பில் இரண்டாம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். அம் மாணவனை பள்ளி தலைமை ஆசி ரியை மணிமேகலை ஆசிரியர்கள் இணைந்து பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். கிராமப்புற பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர் டேனியேல் கூறுகை யில், “இசை ஆசிரியராக பணி யாற்றி வரும் எனது தந்தை ஜெபக் குமாரின் ஊக்கத்தால், 8 வயது முதல் இசை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஹார்மோனியம், டிரம்ஸ், கீ போர்டு இசை பயிற்சி யில் ஆர்வம் உள்ளது. தமிழ்நாடு அரசு கலைத் திரு விழா மூலம் எனது இசை திற மையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு நடை பெற்ற கலைத் திருவிழாவில் கீ போர்டு பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சான்று மற்றும் விருது பெற்றதாக பெருமிதம் தெரிவித்தார். எனது இசை பயணத்தில் தந்தை, ஆசிரியர்கள், சக நண்பர் கள் ஊக்கம் பெரும் உதவியாக உள்ளது, என்றும் எதிர்காலத்தில் சிறந்த இசையமைப்பாளராக வர வேண்டும் என்பதே லட்சியம் என்றும் தெரிவித்தார்.