சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டுகுட்பட்ட முருகப்பா நகர், அண்ணா தெரு, கம்பர் தெரு, வவுசி தெரு, பாரதி தெரு, நேதாஜி தெரு பிருந்தாவன் நகர் பிரதான சாலை, பிருந்தாவன் நகர் விரிவாக்கம் சாலை, 1ஆவது, 2ஆவது குறுக்கு தெரு, ஏடி காலனி 8,10,11 தெருக்கள், ஜோதி நகர் 3, 7, 8 தெருக்கள் ஜெய்ஹிந்த் நகர் நேரு தெரு என 17 தெருக்களில் தார் சாலைகள் அமைக்கும் பணி செவ்வாயன்று (அக். 17) துவங்கியது. இதில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், முருகப்பன் நகர் கிராமத் தலைவர் சொக்கலிங்கம், நிர்வாகிகள் வெங்கடேசன், சக்தி முருகன், ஸ்ரீராமுலு, சீனிவாசலு, வீரராகவன், மாலதி, சுந்தரவடிவு, சிபிஎம் பகுதி குழு உறுப்பினர் கே.வெங்கடைய்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.