சிதம்பரம், நவ. 6- கடலூர் மாவட்டத்தில் புவனகிரி அருகே உள்ளது மிராளுர் கிராமம். இந்தக் கிராமத்தில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை பழுதடைந் துள்ளது. இந்த சாலையை சீரமைத்து கொடுக்க வில்லை. இதனால் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. புதிதாக சாலை அமைத்து கொடுக்க வேண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரி களை சந்தித்து மனு அளித் தும் வரும் கிராம மக்கள் நேரில் வலியுறுத்தி வரு கிறார்கள். 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சாலை சேரும் சகதியுமாக மாறி உள்ளது அவசரத்திற்கு கூட இரு சக்கர வாகனத்தில் பயணிக்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பரமேஸ்வரனிடம் கேட்ட போது,“ சாலை அமைப்ப தற்கு ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்திருக்கிறோம். சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்துள்ளனர். இதன் மீது வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததும் சாலை அமைத்துக் கொடுப்போம்” என்றார்.