districts

img

மிஸ்டர் தமிழ்நாடு’வாணியம்பாடி சங்கீதா சாதனை!

திருப்பத்தூர், ஜன. 17- ஆண்கள் மட்டுமே தடம் பதித்த வந்த உடல் கட்டழகு போட்டியில் கூலி  வேலை செய்து  தனது 2 பிள்ளை களை படிக்க வைத்து கொண்டே தென்னிந்திய அளவிலான போட்டியில்  தங்கம் வென்றுள்ளார் வாணியம் பாடியை சேர்ந்த சங்கீதா. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சங்கீதா (35). சிறு வயதில் இருந்தே நிறைய சாதிக்க வேண்டும் என்பது சங்கீதாவின் லட்சியம். குடும்ப சூழ்நிலை காரணமாக 10ஆம்  வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. மேற்படிப்பிற்கு செல்ல முடிய வில்லை. பின்னர் பாண்டியன் என்ப வரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் மகன் தினேஷ் குமார் என்ற மகனும், 10ஆம் வகுப்பு படிக்கும் நந்தினி என்ற மகளும் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து சங்கீதா தோல் தொழிற்சாலையில் கூலி வேலைக்கு சென்று 2 பிள்ளைகளையும் காப்பாற்றி வருகிறார். மேலும் சாதிக்க வேண்டும் என்பதற்காக வாணியம்பாடியில் உள்ள பாரத் உடற்பயிற்சி மையத்தில் இணைந்து உடல் கட்டழகு போட்டி யில் கலந்து கொள்வதற்காக தீவிர  பயிற்சி மேற்கொண்டார். வறுமையின்  காரணமாக பயிற்சியை தொடரமுடிய வில்லை. இருப்பினும் அவரது முயற்சியை ஊக்குவிக்கும் வகையில்  உடற்பயிற்சி மையத்தின் உரிமை யாளர் குமரவேல் சங்கீதாவிற்கு இலவச  பயிற்சி அளித்தார். கடந்த 2  ஆண்டுகளாக தீவிர பயிற்சி மேற் கொண்ட சங்கீதா மாவட்ட அளவிலான போட்டிகள் மற்றும் மாநில அளவிலான  போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று  பதக்கங்களை குவித்து வந்தார். இந்த ஆண்டிற்கான (2022) உடல் கட்டழகு போட்டி மற்றும் உடற் கட்டமைப்பு போட்டி அன்மையில் தென்காசியில் நடைபெற்றது. தென்னிந்திய அளவிலான இந்த போட்டி யில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய   மாநிலங்களைச் சேர்ந்த 8 பேர் கலந்து  கொண்டனர். இந்த போட்டியில் தென்னிந்திய அளவிலான மிஸ்டர்  உடல் கட்டழகு மற்றும் உடற்கட்ட மைப்பு போட்டியில் பட்டம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். சங்கீதா வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு அவரது உறவினர்கள், பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.