districts

img

4 ஆயிரம் அரசு கலைக்கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி இயக்கம்

சிதம்பரம், ஜன. 4- தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தோற்றுவித்துள்ள போதிலும் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 4ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால்  ஏழை எளிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தேவை யான ஆசிரியர்கள் பணியாற்றும் போது தான் கல்வியின் தரம் உயரும். தமிழகத்தில் உள்ள 170 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறி விக்கப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேல் கடந்தும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பணி நியமனத்திற்கான அறிவிப்பு இது வரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில்  தமிழ்நாட்டில்  அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணி நியமன நட வடிக்கையினை விரைவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம்  நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மண்டல செய லாளர் மணிவர்மன், தலைவர் ரவி உள்ளிட்ட மூத்த பேராசிரியர்கள், கிளை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். இதில் கல்லூரி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன்  கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.