districts

img

மோர்தானா அணையை சுற்றுலா தலமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

குடியாத்தம், பிப். 22- மோர்தானா அணையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் குடி யாத்தம் அருகேயுள்ள வனத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சங்கத்தின் பொருளாளர் ஜி.ரகுபதி தலைமை தாங்கினர். மாவட்டச் செயலாளர் சாமிநாதன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார் ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும். மோர்தானா அணையை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும், யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை, குரங்கு உள்ளிட்ட வன விலங்கு தொல்லையிலிருந்து விவ சாயிகளை பாதுகாக்க வேண்டும், மோர்தானா பகுதியில் செல்போன் டவர் அமைக்க வேண்டும், கிளை கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். சைனகுண்டா பகுதியில் நிரந்தர காவல் நிலையம் அமைக்க வேண்டும், வனவிலங்குகள் சரணாலயம் தொடங்க வேண்டும். மோடிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும். கொட்டமிட்டா அரசு மேல்நிலை பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டும்.  மோடிகுப்பம் கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சாமி நாதன் தொடங்கி வைத்தார். நிர்வாகி கள் வெங்கடாஜலபதி, சிலம்பரசன், குணசேகரன், கோட்டீஸ்வரன், பாண்டுரங்கன், குமார், பாபு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.