சென்னை, ஏப். 8 - ஒற்றை மொழி ஒற்று மைக்கு உதவாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி யுள்ளார். “ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன் படுத்துங்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த இந்தி திணிப்பு குறித்து தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் (டிவிட்டர்), “ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன் படுத்துங்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. ‘இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமித்ஷா நினைக்கிறாரா. ஒற்றை மொழி என்பது ஒற்று மைக்கு உதவாது. ஒற்றைத் தன்மை என்பது ஒருமைப் பாட்டையும் உருவாக்காது. ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.