சென்னை,டிச.15- சென்னை விமான நிலையத்துக்கு பாங்காக்கிலிருந்து வந்த பயணிகள் விமானத்தில் கடத்திவரப்பட்ட அரியவகை குரங்கு, அணில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தென் கிழக்கு ஆஸ்திரேலியா வனப்பகுதியில் காணப்படும் 8 பறக்கும் அணில் என்ற சுகர் கில்டர் குட்டிகள், தென் அமெரிக்கா, பிரேசில் நாடு வனப்பகுதியில் இருக்கும் மர்மோசெட் என்ற வகை 3 சிறிய குரங்கு குட்டிகள், தென் அமெரிக்கா வனப்பகுதியில் வசிக்கும் தேகு லிசார்ட் என்ற 3 ராட்சத பல்லி குட்டிகள் உள்ளிட்ட உயிரினங்களை தாய்லாந்து தலைநகர் பாங்காகிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்டதை விமானநிலைய சுங்க அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் இன்றி கொண்டுவரப்பட்ட 14 உயிரினங்களையும் மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.