districts

திருட்டை தடுக்க நவீன கேமராக்கள் காவல்துறையினர் அறிவுறுத்தல்

ஜோலார்பேட்டை,மே 29- திருட்டை தடுக்க நகை கடைகளில் நவீன கேமராக்கள் பொருத்த வேண்டும் என நாட்டறம்பள்ளியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறையினர் அறிவுறுத்தினர். இந்த  கூட்டத்தில் நகை வியாபாரிகள் சங்க தலைவர் பரமசிவம் தலைமையில் நகைக்கடை உரிமையாளர் சக்திவேல் உள்ளிட்ட சுமார் 40 பேர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு இடங்களில் நகைக்கடைகளில் உள்ள சுவர்களில் துளைகள் போட்டுக் கொண்டு நகைகளை கொள்ளையடித்து செல்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் நகை கடைகளில் தங்களது நகைகளை கான்கிரீட் போட்ட லாக்கர் அறைகள் அமைத்து நகைகளை பாதுகாக்க வேண்டும் சாதாரணம் கேமரா பொருத்தமால் உயர்தரமான கேமராவை தங்களது கடைகளில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகை கடைகளில்  இரவு நேரங்களில் காவலர்கள் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.