கள்ளக்குறிச்சி,ஆக. 8 - கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம், தியாகை பகுதியில் மக்க ளின் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. அப்போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு என்று தனியாக அரங்கம் அமைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டது. இதில், தியாக துருகம் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரி என்ற 17 வயது மாற்றுத்திறனாளி காது ஒலி கருவி வேண்டி மனு அளித்தார். மனு அளித்த சில நொடிகளில் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், உடனடியாக வாங்கினார். இந்நிகழ்வில் தியாக துருகம் ஒன்றிய குழு தலைவர் தாமோதரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் முடநீக்கியல் மருத்துவர் கலந்து கொண்டனர்.