அம்பத்தூர், மார்ச் 11- ஆவடி தொகுதியில் ரூ.1.35 கோடி மதிப்பில் திட்டப் பணிளை நாசர் எம்எல்ஏ திங்கட்கிழமை தொடங்கி வைத்தார். ஆவடி மாநகராட்சி, 14ஆவது வார்டு பட்டா பிராம், அண்ணா நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநகராட்சி நடு நிலைப் பள்ளியில் ரூ.40 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள், ஆவடி சட்டப்பேரவை உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆவடி, டிரைவர்ஸ் காலனி, கவரப்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ரூ.15 லட்சத்தில் புதிய அங்கன் வாடி மையம், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வார்டு 39 ஆவடி, காமராஜர் நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள், ஆவடி சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ஆவடி ராமலிங்கபுரத்தில் ரூ.15 லட்சத்தில் நியாய விலை கடை ஆகிய ரூ.1.10 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டன. இந்த புதிய கட்ட டங்களை ஆவடி சட்டப் பேரவை உறுப்பினர் சா.மு. நாசர் மக்கள் பயன் பாட்டுக்கு திங்களன்று (மார்ச் 11) திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் ஆவடி, காமராஜர் நகரில் உள்ள மாநகராட்சி நடுப்பள்ளியில் கல்வி நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப் பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதில் ஆவடி மேயர் கு.உதயகுமார், மண்டலக் குழு தலைவர் என்.ஜோதிலட்சுமி, மாநகராட்சி உதவி பொறியாளர் அ.பு.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.