கிருஷ்ணகிரி, நவ. 3- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தில் உள்ள தொரப்பள்ளி ஊராட்சி அக்ரஹாரம் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் குழாய், சாலை வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். ஆனால், பட்டா இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். எனவே, தங்களது வீடுகளுக்கு கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில், அக்ர ஹாரம் மக்களின் கோரிக் கையை ஏற்று ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் இங்குள்ள 38 வீடுகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சரயு விடம் மனு அளித்தார். ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா உடனி ருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.