districts

டாம்கோ கடனுதவிக்கு சிறுபான்மை மக்கள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம், ஜூலை 30- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாட்டை சார்ந்த சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி கடன், தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்  களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், ஆட்டோ கடன் ஆகிய  திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் காஞ்சி புரம் மாவட்டத்தில் 09.08.2021 (திங்கட்கிழமை) காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம், 10.08.2021 (செவ்வாய் கிழமை) வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகம், 11.08.2021 (புதன் கிழமை) திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகம், 12.08.2021 (வியாழக்கிழமை) குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவ லகம் மற்றும் 13.08.2021 (வெள்ளிக்கிழமை) உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற வுள்ளது.

எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையி னர்கள் (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும்  ஜெயின்) மேற்படி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய  ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த  விவரம் / திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து  பாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும்  கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி  மாற்றுச்சான்றிதழ் உண்மைச் சான்றிதழ், கல்விக்கட்ட ணங்கள் செலுத்திய ரசீது , செலான், மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்பிக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்  மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

;