காஞ்சிபுரம், ஜன.6 - தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு காஞ்சி புரம் மாவட்ட அமைப்பு குழு கூட்டம் திருப்பெரும் புதூரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் காஞ்சிபுரம் மாவட்ட ஒருகிணைப்பாளர் கே.முகமது கனி தலைமை வகிக்க, கே.புருஷோத்தமன் வரவேற்றார். இதில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, மாநிலக்குழு உறுப்பினர் ஷேக் முகமது ஹனீப் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட நிர்வாகி பி.ரமேஷ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆனந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். திருப்பெரும்புதூர் பொது தொழிலாளர் சங்க நிர்வாகி ப.வடிவேலன் நன்றி கூறினார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு காஞ்சி புரம் மாவட்ட அமைப்புக் குழுவின் கன்வீனராக கே.முகமது கனி தேர்வு செய்யப்பட்டார்.