districts

img

சிறப்பு மனுநீதி நாள் முகாம் அமைச்சர் பங்கேற்பு

ராணிப்பேட்டை, ஜூலை 12 -

     ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தில் உள்ள வெளிதாங்கிபுரம் கிராமத்தில் புதனன்று (ஜூலை 12)நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்று 158 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

   மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் வடிவேலு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சுந்தராம்பாள் பெருமாள், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் தீனதயாளன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.