districts

வாணாபுரம் அரசு பள்ளியில் அமைச்சர் ஆய்வு

கள்ளக்குறிச்சி, ஜூலை19-

     சங்கராபுரம் அருகே உள்ள வாணாபுரத்தில் இயங்கிவரும் கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளி யில், புதிதாக கட்டப்பட்ட 4 கூடுதல் வகுப்பறை உடன் கூடிய விடுதி கட்டிடத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

    அதே பகுதியில் இயங்கி வரும் அரசு தொடக்கப் பள்ளிக்கு சென்ற அமைச்சர், மாணவர்களின் கல்விதிறனை ஆய்வு செய்தார், மேலும் அருகில் இயங்கி வரும் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களிடம் கல்வி தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் செய்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டார்.