திருவண்ணாமலை, ஆக. 31- திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு கோடை விழா துவக்க விழா சனிக்கிழமை (ஆக.30) ஜமுனாமரத்தூர், செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவை அமைச்சர்கள் எ.வ.வேலு, கா.ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். சட்டப்பேரவைத் துணைத் தலை வர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், “ திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கடந்த ஆண்டில் மட்டும் 87 லட்சத்து 91 ஆயிரம் பேர் சுற்றுலா பயணி களாக வருகை தந்துள்ளனர்”என்றார். சுற்றுலாவை மேம்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகயால் வருங்காலங்களில் ஜவ்வாது மலைக்கு ஏராளமானோர் சுற்றுலாவிற்கு வருகை தருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, “திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள 7 ஆயி ரத்து 222 பழங்குடியின மக்களுக்கு தேவை யான சாதிச்சான்று கடந்த இரண்டு மாதங்க ளில் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜமுனா மரத்தூர் வட்டத்தில் மட்டும் 5 ஆயிரத்து 169 பழங்குடியின மக்களுக்கு சாதி சான்று வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். விடியல் பயணம் திட்டத்தின் மூலம் ஜமுனாமரத்தூர் மலை வாழ் பெண்கள் பயன்பெறும் வகையில் இரண்டு பேருந்துகள் புதிதாக இயக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மக்களவை உறுப்பி னர்கள் சி.என்.அண்ணாதுரை (திருவண்ணா மலை), எம்.எஸ்.தரணிவேந்தன் (ஆரணி), சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), எஸ்.அம்பேத்குமார் (வந்த வாசி), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.