திருவள்ளூர், டிச 20- திருத்தணி நகராட்சி அரக்கோணம் சாலையில் 4.92 ஏக்கர் பரப்பளவில் ரூ 12 கோடியே 74 லட்சம் மதிப்பில் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுவதை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் ஆகி யோர் ஆய்வு செய்தனர். பொதுமக்கள் மற்றும் திருத்தணி முருகன் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு போக்கு வரத்து வசதி ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடியபேருந்து நிறுத்தம், கடைகள், குடிநீர் வசதி, ஆண் மற்றும் பெண்கள் கழிப்பிடம் உணவகம், சிற்றுண்டி காவல் மையம், ஏடிஎம் மையம் இருசக்கர, 4 சக்கர வாகன நிறுத்தத்து டன் கூடிய கட்டுமான பணி களை விரைவாகவும் தரமாக வும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அமைச்சர் காந்தி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.