districts

சென்னை முக்கிய செய்திகள்

நகர்ப்புற மகளிர் சுய உதவிக்  குழுக்களுக்கு வங்கி கடன் அமைச்சர் உதயநிதி வழங்கினார்

சென்னை,டிச.23- கலைஞர் கருணாநிதியால், மகளிரின் முன்னேற்றத்திற்கு, 1989ஆம் ஆண்டு முதல் முறையாக தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட மகளிர் திட்டம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தற்போதைய சமூக, பொருளாதார மேம்பாடு அடைவதற்கு இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கட்ட மைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகளை வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில்கள் தொடங்க வங்கி கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுயஉதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறு வனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் டிச.23 அன்று சென்னை, கோட்டூர் புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில், சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் நகர்ப்புறப் பகுதி களில் செயல்படும் 1,877 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பகுதி அளவி லான கூட்டமைப்புகளைச் சேர்ந்த 23,742 பயனாளிகளுக்கு ரூ.125.50 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச. திவ்யதர்சினி, செயல் இயக்குநர் ஸ்ரேயா பி சிங், மாநில அள விலான வங்கியாளர் கூட்டமைப்பின் தலை வர் மோகன் மற்றும் அரசு உயர் அலுவ லர்கள், வங்கியாளர்கள். சுய உதவிக் குழுக்களை சேர்ந்த மகளிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை - கோழிக்கோடு இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்

சென்னை, டிச.23- கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்டிரல் - கோழிக்கோடு இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில் வருகிற 25 ஆம் தேதி சென்னை சென்டிரலில் இருந்து காலை 4.30 மணிக்கு புறப்படும் என்றும், பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வருகிற 25 ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கஞ்சா விற்ற வாலிபர் கைது 

அம்பத்தூர், டிச. 23-  அம்பத்தூர் மதுவிலக்கு காவல்துறையினர் அம்பத்தூர் தொலைபேசி அருகே சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில், அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசவே, அவரி டம் இருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும், அவர் ஆவடி காம ராஜர் நகர் ஆனந்த நகர் திரு வள்ளுவர் தெருவை சேர்ந்த  லோகேஷ்  (20) என்பதும், அவர் ஆந்திர மாநிலம், அனகாபள்ளி என்ற ஊரிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, அம்பத்தூரில் உள்ள வடமாநில தொழி லாளர்களுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவை பறி முதல் செய்தனர்.

முதல்வர் நிவாரண நிதிக்கு  திமுக எம்எல்ஏக்கள் மாத ஊதியம்

சென்னை, டிச.23- மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான முடிச்சூர், முகலி வாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திரு வொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிக மழை பெய்தது. அதி கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அமைச்சர்கள் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பி னர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளனர். இதில் அமைச்சர்கள் ஒரு மாத ஊதியமாக ரூ.35,70,000, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதிய மாக ரூ. 91,34,500 என மொத்தம் 1,27,04,500 ரூபாய்க்கான கா சோலைகள் சட்டப் பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வழங்கினர்.

வரத்து குறைவால் பூண்டு விலை உயர்வு

சென்னை, டிச.23- பூண்டு விளைச்சல் குறைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாகவே பூண்டு விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக  பூண்டு விலை அதி கரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ பூண்டு ரூ.350 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் மட்டும் கிலோ வுக்கு ரூ.150 உயர்ந்துள்ளது. மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் விலை கிலோ வில் வருமாறு:-வெங்காயம்-ரூ.28, தக்காளி ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.27, சின்ன வெங்காயம்-ரூ.80, ஊட்டி கேரட்-ரூ.40, பீன்ஸ்-ரூ.35, பீட்ரூட் ரூ.45, முட்டை கோஸ்-ரூ.15, வெண்டைக்காய்-ரூ.45, கத்தரிக்காய்-ரூ.50, பாகற்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.40 ஆக உள்ளது.

சென்னையில் பாதுகாப்புக்கு  8 ஆயிரம் காவலர்கள்

சென்னை, டிச.23- கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் மட்டும் சுமார் 8 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- சென்னை மாநகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை யொட்டி காவல் துணை ஆணையர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையர்கள் தலைமையில் 8 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இதில் காவலர்களுக்கு உதவியாக ஊர்காவல் படையினர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் டிச.24 இரவு முதல் 25 ஆம் தேதி வரை 350 தேவாலயங்களுக்கு சுழற்சிமுறையில் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவலர்கள் சாதாரண உடையில் சென்று கண்காணித்து திருட்டு உள்ளிட்ட குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.  முக்கியமான தேவாலயங்களில் கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும் சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பில் காவலர்கள் ஈடுபடுவார்கள்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வீடு, வர்த்தக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் மீண்டும் உயர்கிறது !

புதுச்சேரி, டிச.23- புதுச்சேரி மாநிலத்தில் வீடு, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மின் துறையின் வரவு-செலவு கணக்குகள் கோவாவில் உள்ள இணை ஒழுங்கு முறை  ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டு அதற்கேற்ப ஆண்டுதோறும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி 2023-24 நிதியாண்டுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் தந்தார். இதையடுத்து, மின் கட்டண உயர்வு தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் புதுச்சேரி மின்துறை விண்ணப்பித்துள்ளது. அதன்படி வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு 50 காசு முதல் 75 காசு வரை உயர்த்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. குறைந்த மின் அழுத்த தொழிற்சாலை களுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 6.35ல் இருந்து ரூ. 7 ஆக உயர்த்த அனு மதி கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் உயர்  மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.45ல் இருந்து ரூ. 6 ஆகவும், அதி உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.5.50ல் இருந்து ரூ.6 ஆகவும் உயர்த்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பம் தொடர்பாக ஆய்வு  செய்ய இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் புதுச்சேரி வருகிறது.  பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதன் பின்னர் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்வார்கள்.  இந்த மின் கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1  ஆம் தேதி அமலுக்கு வரும். தொடர்ந்து பல ஆண்டுகளாக மின் கட்டணம் புதுச்சேரி யில் உயர்ந்து வருகிறது. புதுச்சேரி மின்துறை உயர்த்தி கேட்கும் மின் கட்டணம் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது தொடர்கிறது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மின்கட்டணம் புதுச்சேரியில் உயர்ந்து வருகிறது. தற்போது தனியாருக்கு மின்துறை செய்ய நடவடிக்கை எடுத்து வரும்  சூழலில் கட்டண உயர்வு அதிகரிக்க உள்ளது.

அரசுப் பள்ளிகளில்  நீட் பயிற்சி தொடக்கம்

விழுப்புரம், டிச.23- விழுப்புரம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர் களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் சி.பழனி தொடங்கி வைத்தார்.  இந்த பயிற்சி வகுப்பில் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பு திண்டிவனம் மேல்நிலைப்பள்ளி மற்றும் செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பெருமாள், செந்தில்குமார், தலைமை ஆசிரியர்  சசிகலா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கனவு ஆசிரியர் விருது: மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

ராணிப்பேட்டை, டிச. 23 - தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் மூலம் நடத்தப்பட்ட கனவு ஆசிரியர் தேர்வில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் விருது பெற்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ச. வளர்மதியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி மாணவர்களை  தீய பழக்கத்திலிருந்து காப்பாற்றுவது ஆசிரியர்கள் முக்கிய கடமை என கனவு விருது பெற்ற ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.  மேலும் கனவு ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றது போல மாணவர்களையும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் தயார்ப்படுத்தும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. குறிப்பாக மாணவர்கள் கல்வியை தாண்டி ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்களை தீய பழக்கத்திலிருந்து காப்பாற்றுவது ஆசிரியர்கள் முக்கிய கடமையாக இருக்க வேண்டும். விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துகள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதில்  மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், முதன்மைக் கல்வி  அலுவலர் உஷா உடனிருந்தனர்.