districts

img

வள்ளீஸ்வரன் தோட்டம் வாரிய குடியிருப்பு

சென்னை, பிப். 4 - மைலாப்பூர் வள்ளீஸ்வரன் தோட்டம், ஜோகித் தோட்டம் பகுதியில் கட்டப்பட்ட மறு கட்டுமான வாரிய வீடுகளை ஞாயி றன்று (பிப்.4) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் மைலாப்பூரில் உள்ள வள்ளீஸ்வரன் தோட்டத்தில் 410 சதுர அடி கொண்ட 630 வீடுகள் ரூ87.53 கோடி  செலவில் மறுகட்டுமானம் செய்யப் பட்டது. இதேபோன்று ஜோகித் தோட்டம் பகுதியில் 417 சதுர அடி கொண்ட 416 வீடுகள் ரூ58.66 கோடி  செலவிலும் மறுக்கட்டுமானம் செய்யப்பட்டது. இந்த 1046 புதிய அடுக்குமாடி குடி யிருப்புகளை அமைச்சர் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசிய அவர், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 72 இடங்களில் ரூ 2 ஆயிரத்து 544 கோடி  மதிப்பீட்டில் 23 ஆயிரத்து 259 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மறுகட்டுமான வீடுகளுக்கு பயனாளி களின் பங்களிப்பு தொகை 5 முதல் 6 லட்சமாக ரூபாய் செலுத்த வேண்டி யிருந்தது. பயனாளிகளின் சிரமத்தை உணர்ந்த அரசு, சாலை, மழைநீர் வடிகால், தெரு விளக்கு, பொது வசதி கட்டிடம் போன்ற அடிப்படை வசதிகளுக்கான செலவுகளை அரசே ஏற்கும் என்று முத லமைச்சர் அறிவித்தார். இதனால் பயனாளிகளின் பங்களிப்பு தொகை சுமார் ரூ4 லட்சம் குறைக்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு பயனாளியும் ரூ1.50 லட்சம்  செலுத்தினால் போதுமானது. இத னால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 24 ஆயிரத்து 766 குடும்பங்கள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகை 594 கோடியே 54 லட்சம் ரூபாயை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் த.வேலு எம்எல்ஏ, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசுச் செயலாளர் சி.சமயமூர்த்தி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர்.சு.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.